முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமடோர் டீ.கே.பீ.தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமடோர் டீ.கே.பீ.தசநாயக்க உள்ளிட்ட 6பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

