அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் – ஜனாதிபதி

263 0

தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உரியமுறையில் கடந்த காலத்தில் நிறைவேற்றாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

அத்துடன் மக்கள் தம்மீது வைத்த எதிர்பார்ப்புகளை படிப்படியாக நிறைவேற்றி, இன்று அரசாங்கம் முன்னோக்கி பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் உண்மையான நிலவரங்களை உண்மைக்கு புரம்பாக வெளிநாடுகளில் வாழும், இலங்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment