புதிய அரசியல் அமைப்பை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – விமல்

278 0

நாட்டை சீரழிப்பதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசியல் அமைப்பை தோற்கடிக்க லட்சக்கணக்கிலான மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

அத்துடன் இதனை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Leave a comment