தேசிய ஒற்றுமைக்காக பல்கலைக்கழகங்கள் முக்கிய வகிபாகத்தை வகிக்க முடியும் – சந்திரிகா 

259 0
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காக, பல்கலைக்கழகங்கள் முக்கிய வகிபாகத்தை வகிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்துக்கான மாதிரபீடத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கு இடையிலான பிணைப்பை மீளக் கட்டியெழுப்ப வலுவான உதவியும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கையர் என்ற அடையாளத்தை மனதிற்கொண்டு, இந்த இலக்கை அடைய அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment