அடுத்த வருடம் முழு அளவிலான மின்சார பற்றாக்குறையொன்று ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது

235 0
அடுத்த வருடம் முழு அளவிலான மின்சார பற்றாக்குறையொன்று ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது பயனுடைமை ஆணைக்குழு இந்த முன்னெச்சரிக்கை
விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த மின்சார பற்றாக்குறையினை தவிர்க்க வேண்டுமானால், இலங்கை மின்சார சபை துரித கதியில் 60 மெகா வாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என்று அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், 150 மெகா வாட் நிலகரி மின்வலுவினை வாங்குவதற்கான கேள்விப் பத்திரம் கோரப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment