பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

230 0

ஊரகஸ் சந்தியில் கொரகீன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) இரவு அந்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 39 வயதான பெண்ணொருவர் என தெரியவந்துள்ளது.

கள்ளக்காதலால் இந்த கொலை இடம்பெற்றிக்கலாம் என நம்பப்படும் நிலையில், குறித்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment