வனவிலங்கு உத்தியோகத்தர்களின் துப்பாக்கி திருட்டு

241 0

வஸ்கமுவ தேசிய பூங்காவில் வனவிலங்கு உத்தியோகத்தர்களின் ஆயுதங்கள் உள்ள அறையினை உடைத்து அதில் இருந்த   சில துப்பாக்கிகளை,  சில நபர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது டி 56 ரக துப்பாக்கி ஒன்றும், மேலும் சில துப்பாக்கிகளும் திருடப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில்,  சம்பவம் குறித்து காவற்துறை  விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேக  நபர்கள் இதுவரையில் அறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment