மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!

379 0

ஊவாபரணகம உடுஹவெர கொத்தலாகொட பிரதேசத்தில் மரக்கறி தோட்டத்தில் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின் வேலியிலிருந்து மின்சாரம் தாக்கி தோட்ட உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவென சட்ட விரோதமாக மின் வேலி ஒன்றை அமைத்துள்ளார்.

இன்று காலை 6 மணியளவில் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சவென சென்றவர் அவர், விலங்குகளுக்காக போடப்பட்ட மின்சார வேலியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் உயிரிழந்தவர் கொத்தலாகொட பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment