மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் நல்லெண்ணம் கொண்டவர்களே அரசியலுக்கு வரவேண்டும்

352 0

cv.w-300x167மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் நல்லெண்ணம் கொண்டவர்களே அரசியலுக்கு வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (புதன்கிழமை) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பகுதி அமைப்பாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான அருந்தவபாலனின் மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சில நாட்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அதுல்கெசாப் நாட்டிலுள்ள இரு இனங்களிலும் நல்லவர்கள் ஒன்றுசேர்ந்துவிட்டாலோ பெருமளவான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

நாட்டில் வல்லவர்களுக்குப் பஞ்சமில்லை. நல்லவர்களுக்கே பஞ்சம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.