மருதங்கேணியில் 25கிலோ கேரள கஞ்சா மீட்பு!

340 0

ganja-02-720x480யாழ்ப்ப்பாணம் மருதங்கேணிப் பிரதேசசபைக்குட்பட்ட மாமுனைக் கடற்கரைப் பகுதியில் 25கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பளைப் பிரதேசத்து காவல்துறையினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கஞ்சாப் பொதிகள் கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே கைப்பற்றப்பட்டதாகவும் பளைப் பிரதேசத்துக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்னமும் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும், பளைப் பிரதேசத்து காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.