வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் போது, கீழ் மட்டத்திலுள்ள வர்த்தகர்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி செயற்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

