மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் எழுத்து மூல அறிவித்தல்

253 0

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியதில்லை என சட்டமா அதிபர் எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் , நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்படி , கட்சித் தலைவர்களின் கூட்டமொன்றை நடாத்துவதற்காக , சபையை ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

பின்னர் , 1.30 மணிக்கு சபை மீண்டும் கூடிய போது , இந்த சட்டமூலத்திற்கு தேர்தலுக்கான மேற்பார்வை குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

Leave a comment