கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மக்கள் வங்கி, தன்னியக்க பணப்பரிமாற்று மற்றும் பில் கட்டண இயந்திரங்களை திறந்து வைத்துள்ளது(காணொளி)

392 0

கிழக்கு மாகாணத்தில் மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளார்களின் வசதிகருதி, மட்டக்களப்பு நகரின் பிரதம பொலிஸ் நிலையத்துக்கு அருகில், பலவசதிகள் கொண்ட தன்னியக்க பணப்பரிமாற்று மற்றும் பில் கட்டண இயந்திரங்களை நேற்று திறந்து வைத்துள்ளது.

மக்கள் வங்கி தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவிப் பொதுமுகாமையாளர்கள் எம்.டி.எஸ். கிரிசாந்தபெரேரா, ஏ.யு.ஏம். அன்சார், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

24 மணிநேரமும் இயங்கும் இந்நிலையத்தில், தன்னியக்க காசளிப்பு இயந்திரம், பணவைப்பு இயந்திரம் மற்றும் கட்டணக் கொடுப்பனவு இயந்திரம் என 3 பிரிவுகளாக உள்ளன.

குறித்த நிலையத்தின் மூலம் சுய வங்கிச் சேவைகளாக பணம் மீளப்பெறல், கணக்குமீதி பற்றிய விசாரணை, இரகசிய குறியீடு மாற்றுதல், சிறு அறிக்கைகள் பெறுதல், பணவைப்பு, மின்சார, நீர்க்கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களுக்கான பணக்கொடுப்பனவு, கணக்குமீதி பற்றிய விசாரணை, மொபைல் ரீலோட்கள், கணக்குகளிடையே பரிமாற்றம், மொபைலில் பணம் அனுப்புதல் போன்றசேவைகளைப் பெறலாம்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் யாக்கொடஆராய்ச்சி, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா, கிழக்குப் பல்கலைக்கழகவேந்தர் வைத்தியக்கலாநிதி விவேகானந்தராஜா, வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a comment