மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

1232 0

மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் குறித்த உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வமத தலைவர்களின் ஆசியுடன் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சி.ஏ.சந்திரையா, தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட அமைப்பாளர் இராஜேந்திரம் பற்றிக், டெலோ முக்கியஸ்தர் கணேசலிங்கம் சொக்கன், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment