உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஜனவரி மாதம் நடத்துமாறு கோரினேன் – பிரதமர்

317 0

உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துமாறு தாம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேரியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

கலப்பு தேர்தல் முறை தொடர்பில் கட்சித் தலைவருடன்  சந்திப்புக்களை மேற்கொண்டுஇ அதன் நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முறைமை ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவு திட்டம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment