வடமாகாணசபை, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள், இறுதியில் பிழையாகவே முடியும் என மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் முன்னால் தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் பொய்யர்கள் என்ற நிலையை உருவாக்க போகிறீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாகாண சபையின் 58வது அமர்வின் ஒத்திவைக்கப்பட்ட 2ஆம் அமர்வு நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
என்றும் இல்லாத அளவுக்கு முன்னாள் போராளிகள் மீது பலருக்கும் அக்கறை வந்துள்ளது.
முன்னாள் போராளிகள் தொடர்பான தகவல்கள் எவரிடமாவது உள்ளதா? மேலும் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக மாகாணசபை எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும்.
அதன் பின்னர் சர்வதேசத்தின் முன்னால் தமிழ் மக்களும், முன்னாள் போராளுகளும் பொய்யர்கள் ஆக்கப்படுவர்.
அதற்கு மாகாண சபையே பொறுப்பு என்றார்.
இதற்கு பதிலளித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நல்லிணக்க செயலணி முன்பாக முன்னாள் போராளிகள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இந்த விடயம் எடுக்கப்பட்டது.
அது சரியாக முடியும், பிழையாக முடியும் என அமைச்சர் கூற முடியாது. என கூறியதுடன் முன்னாள் போராளிகளின் தகவல் என்னிடமும் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

