யாழில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

41997 0
யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு 12.40 மணிக்கு மேற்கொண்ட தாக்குதலில் வீட்டின் படுக்கை அறைக்கு அருகில் மூன்று குண்டுகள் விழுந்து வெடித்துள்ளது.
இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பாக ஒருவரை வீட்டின் உரிமையாளர் இனங்காட்டியுள்ளார்.
இவர் அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்குழுக்களை சேர்ந்தவர் என்றும் இவருடைய மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிசாரால் பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம்பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

Leave a comment