உமையாள்புரம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்து! கார் முற்றாக சேதம்

410 0

நேற்று இரவு பத்து முப்பது மணியளவில் அதிசொகுசு பேருந்து ,கண்டர் இரகவாகனம் மற்றும் கார் ஒன்றும் விபத்துக்குளானதில்  கார் முற்றாக சேதமடைந்துள்ளது  எனினும் எவ்வித உயிர்ச் சேதங்களோ காயங்களோ ஏற்ப்படவில்லை

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசுப் பேருந்து உமையாள்புரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டர் இரகவாகனத்துடனும் காறுடனும் மோதியதிலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது  இவ்விபத்தில் கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் பேருந்து மற்றும் கன்டர்  என்பனவற்றிற்கு  சிறு சேதங்களே ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த விபத்திற்கு    பேருந்து சாரதியின் அதிவேகமே   காரணம்  என பொலிசார்  சந்தேகிக்கின்றனர் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment