இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மைதானம் விடுவிப்பு

643 0

10995496_968966863123267_1205562638149218869_n30 வருடங்களுக்கு மேலாக வவுனியா வான்படை முகாமினால் நிர்வகிக்கப்பட்டு வந்த இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் விளையாட்டு மைதானம் மீண்டும் அந்த கல்லூரியிடமே கையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இந்த மைதானத்தை மீள கையளிக்குமாறு வன்னி பாதுகாப்பு படை தலைமையத்தில் வைத்து அந்த கல்லூரியின் அதிபர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அந்த விளையாட்டு மைதானம் விடுவிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் இந்த விளையாட்டு மைதானம் வான்படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.