அவுஸ்திரேலியா செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்

390 0

Fotor042022619-3அவுஸ்திரேலியா செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் திருப்பியனுப்பபட்டுள்ளனர்.

இந்த தகவலை த டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது.
குறித்த ஆறு இலங்கையர்களும் பயணித்த படகு மூழ்கிய போது  அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் அதனை மீட்டுள்ளனர்.
படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் நீண்ட நாட்களாக அவர்கள் கடலில் தத்தளித்து வந்துள்ளனர்.

இதனை வானூர்தி மூலம் அவதானித்த அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினர் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் முதல் தடவையாக அகதிகள் படகு ஒன்று அங்கு சென்றுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் சிறப்பு வானூர்தி ஒன்று மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.