உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 5ஆம் திகதி – ஜனாதிபதி

16437 0

நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்திசெய்வதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ள உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனை மகாவலி விவசாய சமூகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து விவசாய சமூகத்தினதும் பங்களிப்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மகாவலி விவசாய சமூகத்தினரின் பிள்ளைகளின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் வருடாந்த மகாவலி விளையாட்டு விழா இன்று பொலன்னறுவையில் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மகாவலி விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளின் திறமைகளை இந்த போட்டிகளுடன் மட்டுப்படுத்திவிடாது தொடர்ச்சியாக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வளங்களை வழங்குவது அனைவரினதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment