பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் குழப்ப நிலைமைகளை தோற்றுவிக்கின்றன – மகிந்த

501 0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், நிறைவடைந்த யுத்தம் தொடர்பில் குழப்ப நிலைமைகளை தோற்றுவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதப்புரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, நேற்று வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன், சரத் பொன்சேக தெரிவித்த கருத்து தொடர்பில் தமது நிலைபாட்டை வெளியிட்டமை தொடர்பிலும் ஊடக வியலாளர்கள் மகிந்தவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் வழங்கிய அவர், வடக்கு முதல்வருக்கு பொன்சேகாவின் கருத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பது போல் தாம் எண்ணுவதாக தெரிவித்தார்.

Leave a comment