உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிப்பு – மகிந்த தேஷப்பிரிய

2531 0

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இன்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பொன்று இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் பொது செயலாளர் அலுவலகத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரியவின் தலைமையில் இடம்பெறுகிறது.

இந்த சந்திப்பில் தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போதே, குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாக மகிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது வாக்கு சாவடி தொடர்பான பாதுகாப்பு மற்றும் வாக்குகள் எண்ணப்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a comment