இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொள்கைத்திட்டம்-ஜனாதிபதி

459 0

இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொள்கைத்திட்டம் மிகவும் சக்தி வாய்ந்தது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை – ஹொரோசிபதான பகுதியில் அமைக்கப்பட்ட நீர் தாங்கி ஒன்றை இன்று ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இதன்பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

சிறுநீரக நோய்க்கான தீர்வு காணும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு தூய குடிநீரை வழங்கும் பொருட்டு அமைக்கப்பட்டுவரும் 250வது நீர் தாங்கியே இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இதற்காக 383 மில்லின் ரூபா செலவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment