பயிர்ச்செய்யப்படாதுள்ள தனியார் காணிகள் பயிர்ச்செய்வோருக்காக வழங்கப்படும் – ஜனாதிபதி

246 0

பயிர்ச்செய்யப்படாதுள்ள அனைத்து தனியார் காணிகளையும் பயிர்ச்செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திம்புளாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

வரட்சியினால் அழிவுக்குள்ளான பயிர்நிலங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து, உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து காணிகளும் பயன்படுத்தப்படவுள்ளதுடன், பயிர்ச்செய்யப்படாதுள்ள அனைத்து தனியார் காணிகளும் கட்டாயமாக பயிர்ச்செய்யப்படவேண்டும் என சட்டமியற்றப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Leave a comment