மோட்டார் சைக்கிள் விபத்து, 2 பேர் பலி

284 0

பொலன்னறுவை- ஹிங்குரங்கொட வீதியில் பொலன்னறுவையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் அத்துமல்பிட்டிய எனும் இடத்தில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேறு ஒரு வாகனத்தில் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மற்ற வாகனம் விபத்தின் பின்னர் நிறுத்தாது பயணித்துள்ளதாகவும் பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற வாகனத்தின் சாரதியைக் கைது செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment