பாலர் பாடசாலை சுற்றுலா சென்ற பஸ் விபத்து, 13 பேர் காயம்

282 0

தம்புள்ள-குருணாகல பிரதான வீதியிலுள்ள மல்சிறிபுர கொஸ்கல்ல பிரதேசத்தில் இரு பஸ்கள் மற்றும் வேன் ஒன்று என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து கொகரல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவரும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கெகிராவயிலிருந்து கொழும்பு நோக்கி  சுற்றுலா சென்று கொண்டிருந்த பாலர் பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் ஒன்றும், கந்தளாயிலிருந்து நோயாளர் ஒருவரை கொழும்புக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றும், கொழும்பு – பொலன்னறுவை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a comment