இலங்கையின் சயுரா மற்றும் சாகரா ஆகிய இரண்டு கடற்படைக் கப்பல்கள் இந்தியாவின் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.
இரண்டு கப்பல்களும் இந்தியாவில் நடைபெறும் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் பங்குபற்றுவதற்காக அங்குச் சென்றுள்ளன.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சிகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.
10ஆம் திகதி வரையில் விசாகப்பட்டிணம் கடற்பரப்பிலும், 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் வங்காள விரிகுடாவிலும் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.