அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்தை யாரும் விமர்சிக்கவில்லை – பிரதமர்

274 0

அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் எவரும் விமர்சிக்க வில்லை என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு வலையத்தின் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றும் பொழுதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய அரசாங்கம் உறுவாக்கப்பட்டது.

இரண்டு பிரதான கட்சிகள் இணைவதை தேற்காசிய நாடுகள் முன்னர் அறிந்திருக்க வில்லை.

தாம் அவ்வாறு ஒன்றிணைந்தது பொருளாதாரத்தை வலுப்படுத்தவே.

2 கட்சிகளுக்கும் இடையில் நல்லபுரிந்துணர்வு உள்ளது.

தமது இணக்கப்பாட்டில் பொருளாதார அடிப்படை விடயங்களில் எந்த முரண்பாடும் இல்லை.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகலாம் என கூறலாமே ஒழிய, அவர்கள் எவரும் பொருளாதார கொள்கையை விமர்சித்தது கிடையாது எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment