இராணுவத்தினர் மீது வெளிநாட்டவர்கள் கை வைப்பதை அனுமதிக்க போவதில்லை – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

6630 0

இலங்கை நாட்டு இராணுவத்தினர் மீது வெளிநாட்டவர்கள் கை வைப்பதை அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

எனினும் குற்றமிழைத்த படையினர் மீது உள்ளக விசாரணைகள் நடைபெறும் போது அதனை நிறுத்துவதாக ஜனாதிபதி கூறவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

அவ்வாறு குற்றமிழைத்தவர்களில் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட 30 பேர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எல்லே குணவங்ச தேரர் ஏனையவர்கள் செய்ததை தாம் செய்ததாக கூறும் ஒருவர் என குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா அவருக்கு பித்து பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜகத் ஜயசூரிய இராணுவ தளபதியாக இருந்த போது சிறைச்சாலையில் இருந்த 25 பேரின் கொலைகள் மற்றும் ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டுக்கு அவரே உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார

தம்மை சிறையில் அடைத்து பழிவாங்கிய ஒருவர் தொடர்பில் தாம் எதனையும் கூறக்கூடாது என தெரிவிப்பது சரியானதா? என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா? என தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சரத் பொன்சேகா, மகிந்த பகல் கனவு காணுவதாக தெரிவித்தார்.

அவ்வாறு நடந்தால் நாட்டு மக்களின் சாபக்கேடு என்றும் அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

இராணுவத்தினர் மீது வெளிநாட்டவர்கள் கை வைப்பதை அனுமதிக்க போவதில்லை – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

இலங்கை நாட்டு இராணுவத்தினர் மீது வெளிநாட்டவர்கள் கை வைப்பதை அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

 

எனினும் குற்றமிழைத்த படையினர் மீது உள்ளக விசாரணைகள் நடைபெறும் போது அதனை நிறுத்துவதாக ஜனாதிபதி கூறவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

அவ்வாறு குற்றமிழைத்தவர்களில் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட 30 பேர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எல்லே குணவங்ச தேரர் ஏனையவர்கள் செய்ததை தாம் செய்ததாக கூறும் ஒருவர் என குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா அவருக்கு பித்து பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

ஜகத் ஜயசூரிய இராணுவ தளபதியாக இருந்த போது சிறைச்சாலையில் இருந்த 25 பேரின் கொலைகள் மற்றும் ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டுக்கு அவரே உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார

 

தம்மை சிறையில் அடைத்து பழிவாங்கிய ஒருவர் தொடர்பில் தாம் எதனையும் கூறக்கூடாது என தெரிவிப்பது சரியானதா? என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

 

 

 

 

மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா? என தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சரத் பொன்சேகா, மகிந்த பகல் கனவு காணுவதாக தெரிவித்தார்.

 

அவ்வாறு நடந்தால் நாட்டு மக்களின் சாபக்கேடு என்றும் அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment