நுவன் சல்காதுவிற்கு தொடர்பில் உத்தரவு

14690 0

பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவன் சல்காதுவிற்கு சிறப்பு பாதுகாப்புக்களை வழங்குமாறு சர்சைக்குரிய பிணை முறி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் யசந்த கோதாகொட விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்களை நுவன் சல்காது வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையிலே அவருக்கு பாதுகாப்பை நல்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகம் கோரியுள்ளார்.

 

 

Leave a comment