மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள்

4965 0

 

மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று சட்ட மா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று பிரதம நீதியரசர் பியசாத் டெப் தலைமையிலான நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன் போது சட்ட மா அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

20ம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடக் காலப்பகுதிக்குள் இந்த தேர்தல் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment