யுத்தம் நிறைவடைந்த போதிலும் மக்களிடம் பிரச்சனைககள் இன்னும் தீரவில்லை  – அமைச்சர் மனோ கணேசன்

243 0

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும் மக்களிடம் பிரச்சனைககள் இன்னும் தீரவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் யுத்தம் இல்லை என்றால் பிரச்சனைகள் இல்லை என்று அர்த்தம் அல்ல.

மக்களிடம் பிரச்சனைககள் ஏராளம் இருக்கின்றன என்பதே உண்மை என குறிப்பிட்ட அவர் இந்தப் பிரச்சனைகளுக்கு தற்போது படிப்படியாக தீர்வுக்காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கும், காணாமல் போனவர்களுக்கும் பதிலைத் தேடித்தர வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

 

Leave a comment