ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செழுமையான காலகட்டம் தமது ஆட்சிக் காலத்திலேயே நிலவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலி, ரத்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் தம்மை மறந்து செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66 வது வருட கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.