மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள்

207 0

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் நாளை, திங்கட்கிழமை வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தொவித்துள்ளார்.

நியமனங்களைப் பெறுவோருக்கு நான்கு வார கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment