சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை – மஹிந்த

231 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருடாந்த மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மாநாட்டில் பங்கேற்காதிருக்க தமது தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment