பரீட்சை முறையை மாற்றுவதற்கு குழுவொன்று நியமனம்

237 0

தற்போதைய பரீட்சை முறையை மாற்றுவதற்காக நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

தற்போதைய பரீட்சை முறையினூடாக மாணவர்களின் கல்வி அறிவு மட்டம் உரிய முறையில் கணிப்பிடப்படுவது குறித்த பிரச்சினை நிலவுவதாக அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

சாதாரண தர பரீட்சையின் பின்னர் உயர் தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு 26 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் , அது எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

Leave a comment