இரசாயனவியல் வினாத்தாள் விவகாரம்; ஆசிரியர் உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியில் நீடிப்பு

215 0

உயர்தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வெளியான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மேலதிக வகுப்பு ஆசிரியர், உள்ளிட்ட ஐவர் செப்டெம்பர் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியர் கடந்த 28ஆம் திகதி மதியம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

சட்டத்தரணியூடாக நீதிமன்றில் சரணடைந்த ஆசிரியரை, நீதவன் டீ.ஏ.ருவன் பத்திரண இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் உயர்தர மாணவரொருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment