தற்போது நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியவர்கள் தொடர்பில் பாலித

196 0
மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் அல்ல, கிரிக்கட் வீரர்கள், தெரிவுக்குழு மற்றும் ரசிகர்களுக்கு இடையிலேயே தற்போது நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஆனமடுவ இளைஞர் சேவைகள் மன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துவெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மைதானத்துக்குள் பந்தடித்தார்களே தவிர, போத்தல்களையும் வேறெந்த பொருட்களையும் எறியவில்லை.
ஆனால், இன்று அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அப்பாற்செல்லும் நிலைக்கு இலங்கை தயாராகி வருவதாக பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

Leave a comment