ஜப்பானிய பெண்ணிடம் இந்தியாவில் கொள்ளை – இலங்கையர் கைவரிசை

522 0

japan-girl-rapedஇந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்காக அங்கு சென்றுள்ள ஜப்பானிய பெண் ஒருவரிடம் இலங்கை வழிகாட்டுனர் ஒருவர், அவருடைய உடமைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 10ஆம் திகதியன்று குறித்த பெண், இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து இலங்கையர், ஒருவர் அவர் வழிகாட்டுவதாக கூறி உறுதியளித்துள்ளார்.
தாம், இலங்கையின் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டதாகவும் வாழ்க்கையை கொண்டு செல்லமுடியாத நிலையில் புதுடில்லிக்கு வந்த வழிகாட்டுநனராக செயற்படுவதாகவும் ஜப்பானிய பெண்ணிடம் இலங்கையர் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து குறித்த இலங்கையர், ஜப்பானிய பெண்ணை பழக்கமற்ற பல இடங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அந்த இடங்கள், ஜப்பானிய பெண்ணுக்கு பிடிக்கவில்லை. எனினும் ஒருவாறு அவரின் நம்பிக்கையை இலங்கையர் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அடுத்தநாள் வெளியிடம் ஒன்றுக்கு ஜப்பானிய பெண்ணை அழைத்துச்சென்ற இலங்கையர், அவருக்கு பானம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்
இந்த பானத்தை அருந்திய ஜப்பானிய பெண், சரோஜின் நகர் பகுதியில் மயங்கிய நிலையில் அவரிடம் இருந்த 15ஆயிரம் ரூபா பணம், புகைப்படக்கருவி மற்றும் விலையுயர்ந்த தொலைபேசி ஆகியவற்றை குறித்த இலங்கையர் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.