மாலபேக்கு எதிராக இன்று முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம்v vfcdswaq

6287 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினைக்கு இறுதி தீர்வு பெற்றுத்தர அரசாங்கம் பின்னடிப்பு செய்வதனால், இன்று இரவு நாடளாவிய ரீதியாக ‘தீப்பற்றிய இரவு’ என்று எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
இதன்பொருட்டு சைட்டம் எதிர்ப்பு மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய செயற்குழுவின் பிரசாத் கொழம்பகே எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

சைட்டம் எதிர்ப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் 50யிற்கும் மேற்பட்ட இடங்களில் ‘தீப்பற்றிய இரவு’ என்று எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.

புஞ்சி பொரளை மற்றும் மஹரகமவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

புஞ்சி பொரளையில் ஆரம்பமாகவும் எதிர்ப்பு பேரணி, கொழும்பை நோக்கி வந்தடையும்.

அத்துடன் இதனை மக்கள் போராட்டமாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையில் ஐந்து பாதைகளின் ஊடாக கொழும்பை வந்தடையும் பாரிய வாகன பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைட்டம் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரையில் இவ்வாறான தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment