யானை தாக்கி ஒருவர் பலி!இருவர் படுகாயம்

27613 0
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் பலி, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.என்றும் இலாதவாறு குறித்த பகுதிக்கு வருகை தந்ததாக கூறப்படும் யானை மக்களை அச்சுறுத்தும் வகையில் 3 நாட்களாக செயற்பட்டு வந்தது இந்நிலையில் நேற்று குறித்த யானையை வேடிக்கை பார்க்க சென்ற மூவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது, இதில் ஒருவர் சம்ப இடத்தில் உயிரிழந்ததுடன், காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றி செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். நீண்ட போராட்டத்தின் மத்தியில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த யானையை பிடிப்பதற்கான முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நீண்ட நேரமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதிக்கு பொதுமக்களை செல்ல வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தினரால் அறிவுறுத்தல் ஒலிபெருக்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. குறித்த யானையை பிடித்து பொருத்தமான பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதிக்கு பா உ சுமந்திரன் அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிட தக்கதாகும்.

Leave a comment