பொல்கஹாவலைக்கான புதிய அமைப்பாளராக அனுர சம்பத் நியமனம்

274 0

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொல்கஹாவலைக்கான புதிய அமைப்பாளராக அனுர சம்பத் ஹேவகே நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் பதவி விலக்கப்பட்டதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு அனுர சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக குருணாகலை மாவட்டத்திற்கான அமைப்பாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment