மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் பலி

418 0

யாழ்ப்பாணத்தில் மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், இன்னும் ஒரு மாணவன் இன்னும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று மதியம் 01.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர்கள் எந்த பகுதியினை சேர்ந்தவர்கள் என்று இது வரை கண்டறியப்படவில்லை.

மேலதிக விசாரணையினை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment