ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 16 கிராம் 110 மில்லிகிராம் போதைப் பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபர் எனவும் இன்று (26) அவர் இன்று கல்கிரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை ஹெரோயின் 2 கிராம் 500 மில்லிகிராமுடன் மோட்டார் சைக்கியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் திவுலப்பிட்டிய வலவ்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் நாரம்மல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.