சைட்டம் விசேட சந்திப்பு

196 0

சைட்டம் தனியார் பல்கலைக்கழம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரச மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையே இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர், சட்டமா அதிபர், மருத்துவ சபையின் பிரதிநிதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மருத்துவபீட மாணவ ஒன்றிய செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி காவற்துறையினர் அவர் மீது தொடுத்துள்ள வழக்கு விசாரணை இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக உள்நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின்போது ரயன் ஜயலத் நீதிமன்றில் முன்னிலையாகாமை காரணத்தினால் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Leave a comment