மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அதன்படி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ரயன் ஜயலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
அண்மையில் இடம்பெற்ற சயிடம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.