இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா வலியுறுத்தல்

196 0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நிலவும் முரண்பாட்டை, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பிரச்சினை தொடர்பில் இருநாடுகளுக்கிடையிலும் தற்போது தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இந்தியா தொடர்ந்தும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

இதனையடுத்து குறித்த பகுதியில் தீவிரவாதிகள் மீதான தாக்குதலும் இடைக்கிடையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான இந்திய தகவல்களுக்கு அமைய இந்திய – பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் ஊக்கமளித்து வருவதாக குறிப்பிடுகின்றன.

Leave a comment