ஜனாதிபதியுடன் அரசாங்க மருத்துவர்கள் முக்கிய சந்திப்பு 

200 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது கல்லூரி தொடர்புடைய அனைத்து தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர் எனவே இதன்போது சாதகமான முடிவு எட்டப்படும் என்று மருத்துவர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் குறித்த கல்லூரிக்கான புதிய அனுமதிகளை கோரும் வர்த்தமானியை ரத்துச்செய்யுமாறு தமது சங்கம் கோரியுள்ளதாக அதன் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

Leave a comment