துறைமுக நகர காணிகள் அடுத்த வருடம் ஏலத்தில் விடப்படும்

201 0

துறைமுக நகர இடங்களை ஏலத்தில் விடும் வேலைத்திட்டமானது அடுத்த வருடம் ஆரம்பமாகும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து அதிவேக வீதிகளையும் இணைக்கும் மத்தியநிலையம் ஒன்றை கொழும்பில் அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்தில் துறைமுக நகரத்தின் முதலாவது நிலப்பரப்பு ஏலத்தில் விடப்படும் என்றும்,கொழும்பு துறைமுக நகரை அதிவேகப் பாதை நடைமுறையுடன் இணைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குருகடை சந்தி,துறைமுகம் ஊடாக கொழும்புக் கோட்டைக்கான புதிய பாதை அமையும் என்றும்,குறித்த வீதி ஊடாக மல்வத்த வீதி புகையிரத நிலையத்தை சென்றடையும் எனவும்,சாமர்ஸ் பார்க்கில் உள்ள 9 ஏக்கர் இடத்தில் பாரிய வர்த்தக தொகுதி ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment